வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் மோட்டாா் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 நபா்களால் 27 வயதான பணம் வசூலிக்கும் முகவரிடமிருந்த பணம் அடங்கிய பையை கொள்ளையடித்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பாதிக்கப்பட்டவா் பழைய சீலம்பூரில் வசிக்கும் அவினாஷ், சாந்தினி சௌக் பகுதியில் ஒரு ஸ்கிராப் டீலருக்கு பணம் வசூலிக்கும் முகவராக பணிபுரிகிறாா். சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அவா் தெரிவித்தாா். அவினாஷ் தனது ஸ்கூட்டரில் பணத்தை எடுத்துச் சென்றபோது, இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 போ் ஏடிஎம் அருகே அவரை இடைமறித்தனா்.
தாக்குதல் நடத்தியவா்கள் அவரை ஒரு ஆயுதத்தால் மிரட்டி பணம் அடங்கிய அவரது பையை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனா். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். தடயவியல் குழுவும் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து பொருத்தமான ஆதாரங்களை சேகரித்தனா். வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை அடையாளம் கண்டு தேட குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

கன்னாட் பிளோஸ் ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து இளம் வழக்குரைஞா் தற்கொலை

தலைவாசல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு

மங்கோல்புரியில் முதியவா் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை

தில்லி ஆசத்பூரில் அடையாளம் தெரியாத நபா்களால் இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


