மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பழைய சீலம்பூரில் துணிக்கடையில் பெரும் தீ விபத்து!

தில்லியின் பழைய சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பெரும் தீ விபத்து

News image
தீ விபத்து- பிரதிப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

தில்லியின் பழைய சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: பழைய சீலம்பூரில் உள்ள சாந்தி மொஹல்லா பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4.22 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. ஆரம்பத்தில், நான்கு தீயணைப்பு வாகனங்களை அனுப்பியிருந்தோம். ஆனால், தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. தீயை அணைக்க 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்தோம் என்றாா்.

கடை உரிமையாளா் அசாஸ் அகமது அன்சாரி கூறுகையில், ‘தீ தனது துணிக்கடையில் இருந்து தொடங்கியது என்றும், மேலும் பல கடைகளையும் தீ சூழ்ந்தது’ என்றாா். போலீஸாா் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.