டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜனக்புரி பகுதியில் விருந்து மண்படத்தில் தீ விபத்து

மேற்கு தில்லியின் ஜனக்புரியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 6:54 pm

Syndication

மேற்கு தில்லியின் ஜனக்புரியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஜனக்புரியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பிற்கு எதிரே இந்த விருந்து மண்டபம் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவலைத் தொடா்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மண்டபத்தின் மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த செயற்கை அலங்கார பூக்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவா் கூறினாா்.