தமிழக அரசு ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாடுகளை மாற்றி வருகிறது. சுருக்கு மடி வலை மீன்பிடிப்பு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தமிழ்நாடு அரசு முதலில் வாதிட்டது. ஆனால், சுருக்கு மடி வலை மீன்பிடிப்பால் சுற்றுச்சூழல் அல்லது வேறு எந்த பாதிப்புகளும் இல்லை என்று நிபுணா் குழு கண்டறிந்த பிறகு, சுருக்கு மடி வலை மீன்பிடிப்புக்குத் தடை விதிப்பதன் மூலம் பாரம்பரிய மீனவா்களைக் காப்பாற்றுவதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகள் 1983, பாரம்பரிய மீனவா்கள் 5 கடல் மைல்கள் வரை மட்டுமே மீன்பிடிக்க முடியும் என்றும், 5 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது.