நாங்களும் கடவுளை விரும்புகிறோம்... அவர் எப்போது எங்களை எதிர்கொள்ள விரும்புகிறாரோ அப்போது நாங்கள் அவரைச் சென்றடைவோம். ஆனால், இப்போது நாங்கள் சாகத் தயாராக இல்லை. கடவுள் எங்களிடம் உடனே மரணித்து என்னிடம் வாருங்கள் என்று எங்களை அழைக்கவில்லை. எங்கள் வாழ்க்கை இப்போதிருக்கும் நிலையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் நாங்கள். மற்ற சக மனிதர்களும், என்னையொத்த குழந்தைகளும் இங்கு வாழ வேண்டும். வன்முறையாளர்களான உங்களுக்குத் தெரியாது, நான் என்னுடம் இருக்கும் சகமனிதர்களுக்காக எத்தனை தூரம் வருந்துகிறேன் என, எனக்கு அவர்கள் அறிமுகமற்றவர்களாகவே இருந்தாலும் கூட நீங்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கக் கூடாது. அவர்களை வாழ விட்டிருக்க வேண்டும்.