கோடை விடுமுறை என்றாலே மக்கள் குடும்பம், குடும்பமாக கடற்கரை, அருவிக் குளியல், பீச் ரிஸார்ட்டுகள், மலைவாசஸ்தலங்கள் என்று கிளம்புவது வழக்கமான செயல். ஆனால் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டிய அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் இப்படி துயரமானதாக முடிந்தால் அது வாழ்நாள் முழுமைக்குமாக ஜீரணிக்க முடியாத இழப்பாக மாறிவிடக்கூடும். எனவே பொதுமக்கள் விடுமுறையைக் கழிக்க அருவிக் குளியல் செய்வதெல்லாம் சரி என்றாலும் கூடுமானவரை போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகளுடனே தங்களது பயணத் திட்டங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இப்படியான திடுக்கிடும் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க வேண்டியதாகி விடும்.