2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும் ‘ஆல்கஹால்’ அளவுடன் நிறுத்தினால் ஆரோக்ய பானம்! எப்படி?!

ஆல்கஹால் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது தான் பொதுவான கருத்து. ஆனால் அந்த ஆல்கஹாலையும் அளவுக்கு மீறி அருந்தாமல் அளவறிந்து உட்கொண்டால் அது மருந்தாகிறது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

கார்த்திகா வாசுதேவன்

முகநூலில்  ‘ஹெல்த்தி ஃபுட் சாய்சஸ்’ என்றொரு இணையப்பக்கம் உண்டு. அதில் அவ்வப்போது நமது நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கும் வகையில் சில தகவல்கள் வீடியோ பதிவு முறையில் பதிவேற்றப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாக நம்மால் மறுக்கவும் இயலாது. ஏற்றுக் கொள்ளவும் இயலாது. ஏனெனில் இந்திய உணவு மரபுப்படி எந்த ஒரு பொருளையும் அளவுக்கு மீறி உண்டால் தான் அது நஞ்சாகக் கருதப்படும். சிலருக்கு ஒவ்வாமையால் சில உணவு வகைகள் மற்றும் பானங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அதன்படி ஒவ்வொருவரும் உண்ணும் உணவு மற்றும் பான வகைகளை அவரவர் உடலின் ஜீரணத் தன்மைக்கு ஏற்ப அவரவர் உடல்நலனே தேர்வு செய்து கொள்ளும் விதத்தில் தான் நமது உணவுப் பழக்கங்கள் அமைகின்றன.

ஆல்கஹால் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது தான் பொதுவான கருத்து. ஆனால் அந்த ஆல்கஹாலையும் அளவுக்கு மீறி அருந்தாமல் அளவறிந்து உட்கொண்டால் அது மருந்தாகிறது என்பது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம். 

Story image

இன்றளவிலும் கிராமங்களில் கூட பிரசவமான பெண்களுக்கு சிறிதளவு சிவப்பு ஒயின் மற்றும் பிராந்தி அருந்தத் தருவது வழக்கத்திலிருக்கும் ஒரு பழக்கம் தான். அதற்காக அந்தப் பெண்களை குடிகாரிகள் என்று சுட்ட முடியாது. அது அப்பெண்களுக்கு சிறந்த வலி நிவாரணிகளாகவோ அல்லது பிரசவகாலத்தில் நெகிழ்ந்த உடற்சருமத்தை பொலிவாக்கக் கூடிய மருந்தாகவோ அம்மக்களால்
கருதப்பட வாய்ப்புண்டு. எனவே இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் விஷயத்தை யாரும் தவறுதலாகச் செயல்படுத்தாமல் உடல் ஆரோக்யத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுத்திப் பார்க்கலாம்.

இது கிட்டத்தட்ட அறுவை சிகிச்சையின் போது வலி நீக்கியாகத் தரப்படும் அனஸ்தீஸியா போன்றதே! அந்த வகையில் எடுத்துக் கொண்டு கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் ஆல்கஹால் வகைகளை அளவறிந்து அருந்துவோருக்கு அது மாமருந்து. அளவுக்கு மீறி அருந்தினால் அது விஷம்!

வெவ்வேறு விதமான ஆல்கஹால் பானங்களினால் கிடைக்கக் கூடிய பலன்கள்...

  • ரம் அருந்தினால் தொண்டை வறட்சி மற்றும் தொண்டை வறண்டு போவதால் ஏற்படும் கரகரப்பு இரண்டுமே தீரும்.
  • சில மது வகைகளை ஒன்றாகக் கலந்தால் கிடைக்கும் டெக்கீலா அருந்தினால் அது உடல் கொழுப்பை சீராக்குமாம்.
  • சிவப்பு ஒயின் ஹைப்பர் டென்சனைக் குறைக்க உதவுகிறதாம்.
  • விஸ்கி அருந்தினால் உடல் எடை குறையுமாம்.
  • பிராந்தி அருந்தினால் வயது முதிர்வால் ஏற்படக்கூடிய முதுமைத் தோற்றம் தாமதப்படுமாம்.
  • சாம்பெய்ன் அருந்தினால் இதய ஆரோக்யத்துக்கு நல்லதாம்.
  • வோட்கா அருந்தினால் பல் வலி குறையுமாம்.
  • பீர் சாப்பிட்டால் மூளையின் செயல் திறன் அதிகரிக்குமாம்.

பீர் அருந்துவதற்கான WHO வரையறை...

வாரத்திற்கு ஓரிரு முறை பீர் அருந்துபவர்கள் எனில்;

எப்போதாவது ஒருமுறை அருந்துபவர்கள் எனில்;

விஸ்கி, ரம், ஓட்கா போன்ற ஆல்கஹால் பானங்கள் அருந்துவதற்கான WHO வரையறை...

விஸ்கி, ரம், ஓட்கா போன்ற ஆல்கஹால் பானங்களை வாரத்தில் ஓரிரு முறைகள் எடுத்துக் கொண்டால் அதற்கான திட்டமிட்ட அளவு

- எனவும்  WHO உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கிறது. ஆல்கஹால் மொழியில் ஸ்மால் என்றால் அதற்கான அளவுகோல் 30 மில்லி. லார்ஜ் என்றால் 60 மில்லி.

அதுவே வார, வாரம் முறை வைத்துக் கொண்டு அருந்தாமல் ஏதாவது விழாக்கள் மற்றும் ஸ்பெஷலான தருணங்களில் எப்போதாவது ஒரு முறை தான் அருந்தப் போகிறீர்கள் எனில்

ஒயின் அருந்துவதற்கான WHO வரையறை...

வாரத்திற்கு ஓரிருமுறை தவறாமல் ஒயின் அருந்துபவர்கள் எனில்... 

எப்போதாவது மட்டும் தான் அருந்துவீர்கள் எனில்;

இது தான் உலக சுகாதார நிறுவனம் ஆல்கஹால் அருந்துவதற்கென அனுமதித்துள்ள அளவீடு. ஆனால் மது அருந்துபவர்கள் எல்லோரும் இந்த அளவீடுகளை மதித்துத் தான் அருந்துகிறார்கள் எனில் நம் நாட்டில் மதுக்கடைகளால் பலரது வாழ்வு நிர்மூலமாகி இருக்க வாய்ப்பே இல்லை. எனவே எதையும் மருந்தாக நினைத்து அருந்தும் போது அதனால் கிடைக்கும் பலன்கள் நிறைவாக இருக்கும். அதுவே எந்த எச்சரிக்கைகளையும் மதிக்காமல் போதைக்கு அடிமையாகி நாமாக முடிவெடுத்துக் கொண்டு அளவுக்கு மீறி அருந்தினால் அது நிச்சயம் நஞ்சாகத்தான் மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.