தனது பணிக்காலத்தில் பல வளிமண்டல ஆய்வு அறிக்கைகளை மாணி வெளியிட்டார். வளிமண்டல ஆய்வின் ஓர் அம்சமாக, சூரிய ஒளி ஆற்றல், காற்றாற்றல் மீது அவரது கவனம் குவிந்தது. அவற்றை பிரதான ஆற்றல் மூலங்களாக அவர் உணர்ந்தார். ஆனால், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் காற்றின் விசை, சூரிய ஒளிவீச்சு குறித்த தரவுகள் அப்போது இல்லை.
1957-58-இல் சர்வதேச புவி இயற்பியல் ஆண்டு அனுசரிக்கப்பட்டபோது, நாடு முழுவதும் பரவலாக சூரியஒளிக் கதிர்வீச்சை அளவிடும் மையங்களை மாணி அமைத்தார். அவற்றுக்குத் தேவையான கருவிகளையும் உள்நாட்டிலேயே வடிவமைத்தார்.
1960-களில் அவரது கவனம் ஓஸோன் வாயுவின் மீது திரும்பியது. அப்போது ஓஸோனின் முக்கியத்துவம் பெரிய அளவில் அறியப்பட்டிருக்கவில்லை. ஆயினும் அதன் எதிர்கால முக்கியத்துவத்தை உணர்ந்த மாணி, வளிமண்டலத்திலுள்ள ஓஸோனை அளவிடும் ஓஸோன்சோண்ட் (Ozonesonde) கருவியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். அவரது ஓஸோன் ஆய்வை கெüரவிக்கும் விதமாக, சர்வதேச ஓஸோன் ஆணையத்தின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.
மாணியின் திறûமையை உணர்ந்த இஸ்ரோ நிறுவனர் விஞ்ஞானி விக்ரம் சாராபாய், 1963-இல் தும்பாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்தில் வளிமண்டலக் கண்காணிப்பகத்தை (Observatory) நிறுவுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதை அங்கு அமைத்துக் கொடுத்தார்.