புதிய பீர் பிராண்டுகளான யவிரா மற்றும் பீ யங், இந்தியச் சந்தையில் மிகச் சிறந்த தரமான தயாரிப்புகளுடன் களமிறங்கியுள்ளன. நவம்பர் 2018-இல் நிறுவப்பட்ட கிமயா இமாலயன் பெவரேஜஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த உள்நாட்டு பீர், பண்ணையிலிருந்து ப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
கிமயா இமாலயன் பெவரேஜஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபிநவ் ஜிண்டால் இது குறித்து கூறுகையில், ‘இந்தியாவின் கிராஃப்ட் பீர் தொழில், நாட்டின் பீர் சந்தை பங்கில் 2-3 சதவிகிதத்தை வாங்கியுள்ளது, பயனர்களின் தேவைக்கேற்ப சில மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பீர், கோதுமை, அலெஸ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், 'கிராஃப்ட் லாகர்' வகை இன்னும் இங்கு சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது என் கருத்து. எனவே, பண்ணையிலிருந்து நேரடியாகத் தருவிக்கப்பட்ட மிகச் சிறந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட பெஸ்போக் பீர்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். சிறப்பான பீர் ப்ரூயிங், பிரமாதமான சுவை, ப்ரெஷ்ஷான பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் காரணமாக கிமயா நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பீர் தயாரிப்பில் புதிய வருகையான நாங்கள், எல்லாவற்றிலும் புதுமையாக இருக்கிறோம். முக்கியமாக பேக்கேஜிங் மற்றும் சுவை மூலம் எங்கள் தயாரிப்புகளை வேறுபடுத்துகிறோம். 500 மில்லி கொண்ட தனித்துவமான பேக்கேஜிங்கை அறிமுகப்படுத்திய பின்னர், 330 மிலி (இது பகிர்ந்து கொள்ள மிகவும் சிறியது) மற்றும் 650 மில்லி (சரியான வெப்பநிலையை பாதியிலேயே இழக்கிறது) ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க உத்தேசித்துள்ளோம். சரியான வெப்பநிலையுடன், லாபகரமான விலையில் சரியான அளவுகளில் சிறந்த தரத்துடன் வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்க முயல்கிறோம்.

குறிப்பாக எங்கள் பிராண்டுகளைப் பற்றி கூறுகையில், பீ யங் பயனர்களால் மிகவும் விரும்பத்தக்க பிராண்ட் ஆகும். காரணம், இதன் ப்ரெஷ்ஷான ருசியான, சுத்தமான தயாரிப்பு பயனர்களை கவர்ந்துவிடும். ஒவ்வொரு மிடறும் இளமைத் துள்ளலை வழங்கும். மேலும் இது சாகச உணர்வையும், ஆர்வத்தையும், சிலிர்ப்பையும் பருகியவுடன் உணர்த்தக் கூடிய மிகச் சிறந்த பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இதன் பிரகாசமான மஞ்சள் நிறமானது, 'ஹேப்பி & வைப்ரண்ட்' மனநிலையை குறிக்கிறது.

யவீரா, பிரீமியம் அடர் கருப்பு மற்றும் தங்க நிற பேக்கேஜிங்கில் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'யவிரா' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தமாகவே இந்த பீரின் பெயர் உருவானது. மேலும் இது உள்நாட்டு கள்ளின் பாரம்பரியத்தை தொடர்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்கானிக் பொருட்களால் ஆன இந்த பீர், மிருதுவான, கிரீமியான, மென்மையான, அட்டகாசமான நறுமணத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த இந்திய உணவு வகைகளுடன் அற்புதமாக இணைகிறது’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


