மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நல்ல வேலை வேண்டுமா? ஃபேஸ்புக்கில் அழுத்தமான கருத்துகளை பதிவிட வேண்டாம்

ஒரு நல்ல வேலைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களும், நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆழமான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்கிறது சமீபத

News image

பேஸ்புக்

Updated On :6 பிப்ரவரி 2020, 9:42 am


நியூ யார்க்: ஒரு நல்ல வேலைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களும், நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆழமான கருத்துகளை பதிவிட வேண்டாம் என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு.

இன்டர்நேஷனல் ஜார்னலில் வெளியிடப்பட்ட தேர்வு மற்றும் மதிப்பீடு தொடர்பான ஆய்வறிக்கையில், ஃபேஸ்புக்கில் தங்களது அழுத்தம் திருத்தமான கருத்துகளை பதிவிடும் நபர்களை, சமூக வலைத்தளங்களில் தீயாக வேலை செய்யும் குமார்களை பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியமர்த்த யோசிக்கின்றனவாம்.

2018ம் ஆண்டில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள், வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கம் மூலமாக அவர்களது பணித்திறனை ஆய்வு செய்ததாகவும், அதே சமயம், 60 சதவீதம் நிறுவனங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் எதிர்மறையான கருத்துகளால், விண்ணப்பங்களை நிராகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே, எனது கருத்து, எனது ஃபேஸ்புக் பக்கம் என நாம் நினைத்ததை எல்லாம் சொல்லலாம் என்று இனியும் நினைத்தால் அது உங்களுக்கே பிரச்னையாகிவிடும். நீங்கள் பதிவிடும் கருத்துகளை உங்கள் நண்பர்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று நினைக்காமல், இனி இதுபோன்ற நிறுவனங்களும் பார்க்கலாம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.