தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

போலி கையொப்பத்தை கண்டுபிடிக்கும் செயலி!

இந்தச் செயலியை எந்த ஒரு ஸ்மார்ட் வாட்சிலும் பதிவேற்றம் செய்துவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கையொப்பத்தை இட்டால் போதும்.

News image
Updated On :9 பிப்ரவரி 2017, 12:25 pm

இன்று  உலகம் முழுவதும் உள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களின் கையொப்பத்தை வைத்துதான் பணப் பரிமாற்றம் செய்கின்றன.

தற்போது இந்த கையொப்பம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டிஜிட்டல் பென், டேப்லட்டுகளில் கையொப்பமிட்டு அதனை வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட கையொப்பத்தை சரியானதா அல்லது போலியானதா என்று கண்டுபிடிக்க முடியாத நிலைதான் உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சரியான கையொப்பத்தை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் வாட்ச் செயலியை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் செயலியை எந்த ஒரு ஸ்மார்ட் வாட்சிலும் பதிவேற்றம் செய்துவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கையொப்பத்தை இட்டால் போதும். நாம் கையொப்பமிடும் காலஅளவு, அதன் நுணுக்கங்கள் அடங்கிய தகவல்களை ஸ்மார்ட் வாட்சில் உள்ள அசலேரோ மீட்டர் துல்லியமாகக் கணித்து தகவல்களைச் சேகரித்து வைத்துவிடும்.

பிறகு அதேபோன்ற கையொப்பத்தை ஸ்மார்ட் வாட்சிடம் காட்டினால், அந்த கையொப்பத்தை ஸ்கேன் செய்து பார்த்து, ஸ்மார்ட் வாட்சினுள் பொதிந்துள்ள தகவல்களுடன் ஒப்புநோக்கி, அந்தக் கையெழுத்து உண்மையானதா? போலியானதா? என்று கண்டுபிடித்துவிடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.