தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேக்கேதாட்டு விவகாரத்தில் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருப்பது ஏன்? - மாணிக்கம் தாகூர் கேள்வி

மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மௌனமாக இருப்பது ஏன்? என மாணிக்கம் தாகூரின் கேள்வி குறித்து...

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 10:01 am IST

மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்காமல் மௌனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மேக்கேதாட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்?

இப்போதும் முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் உரிமைக்காக உறுதியான நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆனா "கனெக்டிங் கால்" பேசுற" பேசுற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி … எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் கேள்வி கேக்கல?

பிரதமர் நரேந்தி மோடி உடனடியாக மேக்கேதாட்டு முன்மொழி திட்டத்தை ரத்து செய்து, காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமை பங்கை பாதுகாக்க வேண்டும்.

அதனை முதல்வரின் கடிதம் தெளிவாக சொல்கிறது.

இந்த முன்மொழித் திட்டம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு்கும் காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கும் எதிரானது. மேலும், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.

இது அரசியல் விவகாரம் இல்ல.

இது நம்ம நீர்…

நம்ம விவசாயிகள்…

நம்ம தமிழ்நாடு உரிமை.

தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல் காவிரியில் எந்த திட்டமும் வரக்கூடாது.

முதல்வர் கடிதத்துக்கு முழுமையான ஆதரவு. தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றாக நிற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Why are Opposition leader Udhayanidhi and Ex CM Edappadi Palaniswami remaining silent mode on the Mekedatu issue?...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.