திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் யார்?

தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் யார்? என்பது குறித்து...

News image

தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் - DNS

Updated On :4 மே 2026, 1:51 pm IST

1952 முதல் தற்போது வரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகுடம் சூடி நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் வரிசையில் திமுக தலைவர் கருணாநிதி இருக்கிறார்

1952-இல் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் மெட்ராஸ் மாகாணத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்றார்.

குலக்கல்வித் திட்டத்திற்கு பெரும் எதிப்புகள் எழுந்ததை அடுத்து முதல்வர் ராஜாஜி, தனது பதவியை ராஜிநாமா செய்த பிறகு, காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து காமராஜர் தொடர்ந்து 3 முறை முதல்வராக 9 ஆண்டுகள் இருந்தார்.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலுவிழந்து வந்ததையடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்கிற காமராஜர் திட்டத்தின் கீழ்(கே-திட்டம்) 1963 இல் காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து 1967-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் அறிஞர் அண்ணா. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். புற்றுநோயால் பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்த அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து 1971 பேரவைத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்த நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.

இதனிடையே, திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக எனும் புதிய கட்சி தொடங்கி எம்ஜிஆர் 1977 பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார். 1980, 1984 பேரவைத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்ற எம்ஜிஆர் சுமார் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1991 பேரவைத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்று முதல்முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 14 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்த ஜெயலலிதா, டான்சி வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளால் இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்தார். இருப்பினும், 2011-க்குப் பிறகு 2016 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவரான மு.க. ஸ்டாலின், 2021 பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று கூறி பதவியேற்றது தமிழக அரசியலில் பெரும் பேசும்பொருளானது.

இதையடுத்து தமிழகத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்கள் பட்டியலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், காமராஜர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Summary

Who was the Chief Minister who ruled Tamil Nadu for the longest period?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.