தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து...

News image

தமிழக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். - டிஎன்எஸ்

Updated On :1 ஜூன் 2026, 10:55 am IST

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், மொசல் மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் நீர்வரத்து ஒகேனக்கல்லுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை பொருத்தவாறு காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது காலையில் அதிகரிப்பதும், மாலையில் குறைவதுமாக இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும், நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் விழும் நீரின் அளவு சற்று அதிகரித்து, அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

மேலும் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர் வளத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Summary

water flow to hogenakkal falls increases to 4000 cubic feet per second

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.