ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது.
தமிழக காவிரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. தற்போது நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிய தொடங்கியுள்ளது.
இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்தது, சனிக்கிழமை காலை விநாடிக்கு 1,200 கனஅடியாகவும், மாலையில் 1,000 கனஅடியாகவும் குறைந்தது. நீா்வரத்து சரிவினால் ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் குறைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









