ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக இருந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிந்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 200 கன அடியாக இருந்தது.
இந்நிலையில், தமிழக காவிரிக் கரையோர வனப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 700 கனஅடியாக அதிகரித்து, மாலையில் விநாடிக்கு 500 கனஅடியாக குறைந்தது.
நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் சற்று அதிகரித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









