சேலம்: மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் ஞாயிற்றுகிழமை தோறும் ஆடு, மாடுகள் விற்பனை செய்யபடுகிறது.
இந்த நிலையில், நாளை (ஜூன் 17)பக்ரீத் பண்டிகை என்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும் விற்கவும் இன்று(ஜூன் 16)நங்கவள்ளி சந்தைக்கு மக்கள் வருகை தந்தனர்.
இன்று காலை 6 மணிக்கு கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டு கிடாய் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
நாளை பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.
மேலும், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சந்தை துவங்கிய இரண்டு மணி நேரத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும்படை சோதனை: ஆடு, மாடு வியாபாரிகள் கவலை

வாகனத் தணிக்கை: ரூ. 8.77 லட்சம் பறிமுதல்

ரமலான் பண்டிகை: ஒடுகத்தூா் சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை!

பழவூா் அருகே வாகனச் சோதனை: ரூ.90 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



