திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதியதில் வியாழக்கிழமை 6 பேர் பலியாகினர்.

News image
தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 6 பேர் பலி
Updated On :25 ஏப்ரல் 2024, 3:43 am

PTI

சூர்யாபேட்டை: தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதியதில் வியாழக்கிழமை 6 பேர் பலியாகினர்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட் நகருக்கு அருகே ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது வியாழக்கிழமை அதிகாலை ஓட்டுநர் உள்பட 10 பேருடன் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் பயணித்த ஒரு பெண் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். 4 பேர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கோடாட் டிஎஸ்பி ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.