2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய உதவி என்ன?

'முன்னொரு பொழுதினிலே' குறும்படத்தின் கதை இதுவே. தந்தை, மகன், மனைவி உறவை இந்தக் கதை மிக அழகாக சித்திரிக்கிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:10 am

மணிகண்டன் தியாகராஜன்

திருக்குறள் 67: 'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்’ மக்கட்பேறு அதிகாரத்தில் வரும் இந்தக் குறளின் பொருள், மகனை கற்றவர் சபையில் முதன்மை அடையச் செய்வதே தந்தை புரியும் நன்மையாகும் என்று சொல்கிறது. தாயும், தந்தையும் இல்லாமல் வளர்பவர்களுக்குத்தான் அவர்களின் அருமை தெரியும் என்று சொல்வார்கள். தந்தையும், தாயும் மகனை சிறப்பாக வளர்த்து விடுவார். ஆனால், வயதாகி வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்படும்போது, சுமை என்று அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள் இன்றைய கால பிள்ளைகள்.

Story image

'முன்னொரு பொழுதினிலே' குறும்படத்தின் கதை இதுவே. தந்தை, மகன், மனைவி உறவை இந்தக் கதை மிக அழகாக சித்திரிக்கிறது. முதல் மனைவி இறப்புக்கு பிறகு, குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

மனைவி பொய் சொல்லிவிட்டு எங்கோ வெளியே செல்வதைப் பார்த்து சந்தேகம் கொள்கிறார். ஒருவேளை திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருக்கிறாரோ என்று பார்ப்பவர்களுக்கும் அந்தப் பெண் கதாபாத்திரம் சந்தேகத்தை எழுப்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், உண்மை அதுவல்ல. அவர் கணவரிடம் சொல்லாமல் செல்லும் இடம் மாமனாரைப் பார்ப்பதற்காக. மகனால் தனி வீட்டில் தனித்து விடப்பட்ட தந்தை தான் யார் என்பதையே மறந்துபோய் திண்டாடி வருகிறார். நான் தான் உங்கள் மகள் என்று கூறி அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து, கணவரிடம் பெரியவர்களின் அன்பை புரிய வைக்கிறார் மனைவி. மனைவியாக காயத்ரி ஐயர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தை, மகன் கதாபாத்திரங்களில் வருபவர்களும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Story image

இந்தப் படத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய ஒன்று இசை. இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, காட்சிகளுக்கு தேவையான இடங்களில் கச்சிதமான இசையை வழங்கியுள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஔிப்பதிவாளரும் கதைக்குத் தேவையான பங்களிப்பைச் செய்துள்ளார். தந்தையிடம் நான் தான் உங்கள் மகன் என்று சொல்லமுடியாமல் போகும் இடம் அருமை. பெற்றவர்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சமூகத்துக்கு அவசியமான இது போன்ற கதையை இயக்கிய இயக்குநர் எம்.கெளதம் பாராட்டுக்குரியவர்!

திருக்குறள் 70: 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.' இந்தக் குறளுக்குப் பொருள், தனக்குக் கல்வியை அளித்து வளர்தெடுத்த தந்தைக்கு மகன் செய்யும் உதவி, தந்தை இதுபோன்ற மகனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ என்று நினைக்குமாறு நடத்தலாகும்.

ஆம். தந்தைக்கு மகனாற்றும் உதவி 70-ஆவது குறள் சொல்லும்படியே இருந்தால் நன்று!

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.