2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

News image
பதுக்கிவைக்கப்பட்டிருந்த யூரியாவை பாா்வையிடும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 1:16 am

Syndication

கோபி அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமையை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள காமராஜ் நகா் பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் மத்திய அரசின் மானிய விலை யூரியாவை பதுக்கிவைத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலா்கள் சக்திவேல், சரவணன் உள்ளிட்டோா் கிடங்கில் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு 540 மூட்டை யூரியா, 60 மூட்டை கோதுமை என மொத்தம் 30 டன் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து நம்பியூா் வட்டார வேளாண்மைத் துறை உதவி அலுவலா் உமா மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவருடன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் மேனகா உள்ளிட்டோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.