மக்களவைத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார்: கமல்ஹாசன் பேட்டி
2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன்


மதுரை: 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே. போஸ் ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்த இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில், இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பணிகளை போட்டி போட்டு செய்து வருகின்றன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தற்போது போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால், பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...