ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தலைநகர் தில்லியில் துணிகரம்: சொத்து பிரச்னைக்காக டாக்டர் மீது துப்பாக்கி சூடு

தலைநகர் தில்லியில் சொத்து பிரச்னை காரணமாக காரில் வந்த மருத்துவர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை போலீஸார் தேடி

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:26 am

புதுதில்லி: தலைநகர் தில்லியில் சொத்து பிரச்னை காரணமாக காரில் வந்த மருத்துவர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

தெற்கு தில்லியின் கடாய்பூர் பகுதியில் டாக்டர் ஒருவர் தனது சகோதரர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (ஏப் 29) காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் டாக்டர் வந்த கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.

காரில் இருந்த டாக்டரும் பதிலுக்கு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில், மூன்று அல்லது நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், படுகாயம் அடைந்த டாக்டரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   
விசாரணையில், நீண்ட காலமாக நடந்து வரும் சொத்து தகராறு காரணமாக மருத்துவரின் இரு சகோதரர்களின் தூண்டுதலின் பேரில் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு நடந்தது தெரிய வந்தது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து சுமார் 22 வெற்று தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.