அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மதுக்கடைகளை ஊருக்குள் ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆதார், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட  மதுக்கடைகளை ஊருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட  மதுக்கடைகளை ஊருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து ஆண்டியார்பாளையம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை , குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உச்சநீதிமன்ற உத்தரவு படி மாநில நெடுஞ்சாலை , தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதையடுத்து , புதுச்சேரியில் உள்ள  தேசிய , மாநில  நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டது. இதில் திருபுவனை  ஆண்டியார்பாளையம் பகுதியில்  மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள  கிராமத்தின்   உட்புறம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும் ஆண்டியார்பாளையம் ஊருக்குள் கொண்டுவர முயற்சித்து வருவதை அறிந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 100 க்கும் மேற்பட்ட ஆண்டியார்பாளையத்தை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் ஆதார் அடையாள அட்டை , வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் முறையிட்டதை அடுத்து அவர் மனு அளித்துவிட்டு செல்லுங்கள். இதன் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக தெரிவித்தனர். மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.