டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே பைக் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் சாவு

விருதுநகர் அருகே பைக் மோதிய விபத்தில் காயம் அடைந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:38 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பைக் மோதிய விபத்தில் காயம் அடைந்த அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே குப்பாம்பட்டியைச் சேர்ந்தவர் பாபு(40). இவர் வெள்ளிக்கிழமை மாலையில் வச்சக்காரப்பட்டியில் இருந்து சாத்தூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சாலையோரத்தில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி காலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் பாபு மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரி்தது வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.