டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி 3 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு கீழே தள்ளி காயம் ஏற்படுத்தி விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:49 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு கீழே தள்ளி காயம் ஏற்படுத்தி விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ஜெயலட்சுமி(32). இவர் செவ்வாய்கிழமை காலையில் அருகில் உள்ள அரவை மில்லிற்கு மாசல் பொடி அரைப்பதற்காக சாலையில் நடந்து சென்றாராம். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்து 25 மதிப்புள்ள மர்ம நபர் இளைஞர் ஒருவர் வழிமறித்தாராம்.

அப்போது, எதிர்பாரத நேரத்திற்குள் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையையும் பறித்துள்ளார். அப்போது, சத்தம் போட்டு உதவிக்கு ஆள்களை அழைப்பதற்குள் ஜெயலட்சுமியை கீழே தள்ளிவிட்டு வேகமாக வாகனத்தில் விருதுநகர் சாலையில் தப்பியோடினாராம். உடனே காயம் அடைந்தவரை உறவினர்கள் மீட்டு  விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.