15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருச்சி ராஜா காலனி அருகே சுற்றுச்சுவர் இடிந்து கட்டடத் தொழிலாளி சாவு

திருச்சி ராஜா காலனி அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியின்போது, வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On :22 ஜூன் 2015, 2:41 am

திருச்சி ராஜா காலனி அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியின்போது, வீட்டின் பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

நியூ ராஜா காலனி, விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் அப்பகுதியில் 16 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்த குடியிருப்பை சுற்றித் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஏற்கெனவே இருந்த தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் அஸ்திவாரம் தோண்டிக்கொண்டிருந்த மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பாலையூரைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் (45) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

சக தொழிலாளர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே ஸ்ரீரங்கன் உயிரிழந்தார். இதுகுறித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.