நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் வட்டக்கிளையின் 5-வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:47 am

எஸ். பாண்டியன்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் வட்டக்கிளையின் 5-வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அச்சங்கத்தின் அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் திருக்குமார் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் எம்.ஹபிப் அப்துல்லா முன்னிலை வகித்தார். வட்டக்கிளை தலைவர் எஸ்.குருசாமி சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார்.

இதில், பல்வேறு துறைகளில் பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.லட்சுமிநாராயணன், அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வைரவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இக்கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக எஸ்.குருசாமி, செயலாளராக ஆர்.நடராஜன், பொருளாளராக எஸ்.ராஜசேகன், துணைத் தலைவராக எஸ்.விஜயராகவன், இணைச் செயலாளராக எஸ்.அஷ்டராஜன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.