2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் வேன் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

விருதுநகரில் சவாரி பிடிக்கும் தகராறில் வேன் டிரைவராக  தாக்கியதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:43 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சவாரி பிடிக்கும் தகராறில் வேன் டிரைவராக  தாக்கியதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
   விருதுநகர் அருகே அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன்(27). இவர் கச்சேரி சாலையில் மேற்கு காவல் நிலையம் அருகே வாடகை நிறுத்தத்தில் வேன்   வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். அதேபோல், பர்மா காலனியைச் சேர்ந்த ரத்தினம்(30), லட்சுமி காலனியைச் சேர்ந்த சக்தி(31) ஆகியோரும் வாடகை  வேன் நிறுத்தியுள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி சவாரி பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்படுமாம். இதேபோல், வியாழக்கிழமை இரவு இவர்களுக்குள் வேனுக்கு சவாரி பிடிப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாம். இதில், ஆத்திரம் அடைந்த ரத்தினம், சக்தி உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து நாகராஜனை தாக்கினார்களாம். இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் நாகராஜன் புகார் செய்தார்.
    அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரத்தினம், சக்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான இரண்டு பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.