2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு

விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:43 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

விருதுநகர் அருகே பெத்தனாட்சிநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(58). இவர் விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றராவார்.

இவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு வியாழக்கிழமை மாலையில் இவரது மனைவி ராஜசுந்தரி மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் வந்துள்ளனர். அப்போது,  ராஜசுந்தரி பேரில் இருக்கிற சொத்தை எல்லாம் எழுதி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம்.

இது தொடர்பாக முத்துச்சாமி விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மனைவி ராஜசுந்தரி, மைத்துனர்களான ரவி, ராஜதுரை மற்றும் உறவினர் ராஜ் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.