இதில், விவசாயிகள் 100 சதவீத சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். சிறு, குறு விவசாயிகளாகவும், அதற்கான சான்று வட்டாட்சியரிடமும் பெறப்பட்டிருக்க வேண்டும். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு ஆகியவைகளுடன் மின் இணைப்பு அவசியம் ஆகும். பெண்கள், ஆதிதிராவிடர், ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குத்தகை விவாயிகளாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கான குத்தகை பத்திரம் நகல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவாசயிகள் ஒன்றாக இணைந்து சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.