2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மாவட்டத்தில் சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

இம்மாவட்டத்தில் நிகழாண்டில் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வேளாண்மை பயிர்கள் மற்றும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:42 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க தகுதியான விவசாயிகளிடம் இருந்து வேளாண்மை துறை மூலம்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இம்மாவட்டத்தில் நிகழாண்டில் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வேளாண்மை பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 398 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க வேளாண்மை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

இதில், விவசாயிகள் 100 சதவீத சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். சிறு, குறு விவசாயிகளாகவும், அதற்கான சான்று வட்டாட்சியரிடமும் பெறப்பட்டிருக்க வேண்டும். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு ஆகியவைகளுடன் மின் இணைப்பு அவசியம் ஆகும். பெண்கள், ஆதிதிராவிடர், ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குத்தகை விவாயிகளாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கான குத்தகை பத்திரம் நகல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவாசயிகள் ஒன்றாக இணைந்து சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.

இதற்கு விவசாயிகள் தங்களது நிலத்தின் கணினி சிட்டா, குடும்ப அட்டை நகல், புகைப்படம் 2, கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற அடங்கல், நிலத்தின் வரைபடம், மண்பரிசோதனை மற்றும் நீர்ப்பரிசோதனை ஆவணங்களுடன் உரிய சொட்டுநீர் பாசன விண்ணப்பத்தினை வருகிற 18-ம் தேதிக்குள் அந்தந்த பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க முன்னுரிமை பதிவு செய்து பயனடையும்மாறு விவசாயிகளை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.