2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே அனுமதியின்றி தயாரித்த 6800 கருந்திரி கட்டுக்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் அனுமதியின்றி தயார் செய்து வைத்திருந்த 6800 கருந்திரிக்கட்டுக்களை பறிமுதல் செய்தும், அந்த பட்டாசு ஆலைகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:42 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் அனுமதியின்றி தயார் செய்து வைத்திருந்த 6800 கருந்திரிக்கட்டுக்களை பறிமுதல் செய்தும், அந்த பட்டாசு ஆலைகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் சுபா நந்தினி மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளார்.  

விருதுநகர் வட்டார பகுதிகளில் எவ்வித அனுமதியில்லாமல் கூடாரம் அமைத்தும், தனியார் ஆலைகளிலும் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயாரித்து வருவதாக ஆட்சியருக்கு தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினிக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி பகுதியில் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகே  வருவாய் துறையினர் வருவதை அறிந்து கருந்திரி தயாரித்து துண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர்.

உடனே அந்த அறைக்கு விரைவாகச் சென்று பார்வையிட்ட போது கருந்திரிகளை தயாரித்து வைத்திருந்தனர். உடனே அங்கிருந்த 5600 கருந்திரி கட்டுக்களையும், அப்பகுதியில் மற்றொரு தனியார் பட்டாசு ஆலையிலும் தயார் செய்து வைத்திருந்த 1200 கருந்திரி கட்டுக்களையும் என மொத்தம் 6800 கட்டுக்களையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அங்குள்ள மணற்பரப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அழித்தனர்.

இது தொடர்பாக கோட்டாட்சியர் சுபாநந்தினி கூறுகையில், எவ்வித  அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக கருந்திரிகளை தயார் செய்த பட்டாசு ஆலைகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளதாக மட்டும் அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.