சாத்தூர் அருகே கொலைச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா45). இவரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அர்ச்சுனா ஆற்றுப் படுகையிலுள்ள உரைகிணற்றில் மர்மமான


சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தொழிலாளியை அடித்து கொலை செய்து உரைகிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா45). இவரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அர்ச்சுனா ஆற்றுப் படுகையிலுள்ள உரைகிணற்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக இருக்கன்குடி போலீஸார் வழக்குபதிவு செய்து கொலை செய்து உரைகிணற்றில் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக இருக்கன்குடியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் சுப்புராஜா(45). விருதுநகர் ஜேம்.எம்.2 நீதிமன்றத்தில் நீதிபதி பாலகிருஷ்ணன் முன்பாக சரண் அடைந்தார். அவரை விசாரணை செய்த நீதிபதி 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்நது போலீஸார் சுப்புராஜை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விருதுநகர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...