ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கார்கள் திருட்டு வழக்கில் இருவர் கைது

திருச்சி கருமண்டபம் பகுதிகளில் வாசலில் நின்ற கார்களை திருடிய இருவர் செவ்வய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:15 am

சி.சண்முகவேல்

திருச்சி கருமண்டபம் பகுதிகளில் வாசலில் நின்ற கார்களை திருடிய இருவர் செவ்வய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கருமண்டபம் அருகேயுள்ள ஜெய்நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (32). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த அவரது கார் திருட்டு போனது. இதே போல் அதே பகுதி சக்தி நகரைச் சேர்ந்த சுரேஷ் (40) என்பவருடைய காரும் திருட்டு போனது. இருவரும் அளித்த புகார் குறித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிந்து கார்களை திருடிய மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை ஒத்தக்கடை பகுதியிலுள்ள வாகனங்களுக்கு பதிவெண்கள் எழுதும் ஒரு கடைக்கு காரில் வந்து இறங்கிய சந்தேகத்திற்குகிடமான  இருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கருமண்டபம், புதுத்தெருவைச் சேர்ந்த செல்வம்(24),தினேஷ்(25) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் மேற்கண்ட நபர்களின் கார்களை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.