டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உளவுத்துறை அதிகாரியாகக் கூறி மாநகராட்சி பொறியாளரை மிரட்டியவர் கைது

மதுரை மாநகராட்சிப் பொறியாளரை தான் ஒரு உளவுத்துறை அதிகாரி என்று கூறி, மிரட்டியவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:50 am

ஜெயப்பாண்டி

மதுரை மாநகராட்சிப் பொறியாளரை தான் ஒரு உளவுத்துறை அதிகாரி என்று கூறி, மிரட்டியவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி பொறியாளர் மதுரம். இவரது அலுவலகத்துக்கு வந்த ஆமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர், தாம் உளவுத்துறை அதிகாரி என்று கூறியுள்ளார்.

பின்னர் பொறியாளர் மீது அதிக புகார்கள் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால், பொறியாளர் தல்லாகுளம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வந்து அவரைப் பற்றி விசாரித்தபோது

அவரது பெயர் லலித் டோலோபியா என்பதும் அவர் குஜராத் ஆமதாபாத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர், பொறியாளரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.