தீயணைப்பு வீரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. வீரர்களுக்கு 1980 சிறப்புக்கவச உடைகள் அளிக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் மாஸ் டிரில்லிங் ஒத்திகை நடத்தினால், விபத்துகளின் போது விரைந்த செல்ல ஏதுவாகும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து நிலையங்களுக்கும் 100 என்ற தொலைபேசி எண் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீயணைப்புத்துறையில் உள்ள 1000 காலிப் பணியிடங்களை நிரப்பிட இன்னும் 3 மாதங்களில் சீருடைப்பணியாளர் தேர்வு நடத்தப்படவுள்ளது. அதன்படி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.