விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் பெரியவள்ளிக்குளம் சோதனைச் சாவடியில் வட்டாட்சியர் தேவராஜ் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக சென்று வருகிற வாகனங்களில் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் அருப்புக்கோட்டை சென்று கொண்டிருந்தார்களாம். பெரியவள்ளிக்குளத்தில் மதிமுகவின் தொண்டர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்து பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் போலீஸார் ஆகியோர் சோதனையிட்டனர். அப்போது, யாரது எனக் கேட்டு மதிமுக தொண்டர்களை பார்த்து எங்க செல்கிறீர்கள் என கேட்டாராம். அதற்கு வைகோவுடன் செல்வதாக தொண்டர்கள் தெரிவித்ததற்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தரக்குறைவாக பேசினாராம்.