2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மாரியம்மன் திருக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதேபோல், தேசபந்து மைதானத்தில் இரவு நேரங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. இதைத் தொடர்ந்து  10-ம் தேதி வரையில் திருவிழா நடைபெற இருக்கிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதேபோல், தேசபந்து மைதானத்தில் இரவு நேரங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழா ஏப்.6ம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்  7-ம் தேதி கயிறு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துதல், 8-ம் தேதி வெயிலுகந்தம்மன், மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் நிகழ்ச்சியும், 10ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டும் நிகழ்ச்சியுடன் திருக்கோயில் வளாகத்தில் கொடி இறக்கப்படும்.

இதை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கேவிஎஸ் பள்ளி மைதானத்தில் விழாக்குழுவினர் சார்பில் பொருட்காட்சியும் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து பங்கேற்பார்கள். ஏற்கனவே இந்த விழாவை ஊர் சாட்டுதல் நிகழ்ச்சி அன்றே திருக்கோயில் வளாகம் மற்றும் தெப்பக்குளம் பகுதி ஆகியவைகள் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பராசக்தி ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.