2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் மக்களவை தொகுதி பொதுமக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்: திருப்பூர் துரைசாமி

விருதுநகர் மக்களவை தொகுதி பொதுமக்கள் யார் நமக்கு நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என மதிமுகவின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கேட்டுக்கொண்டார். 

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதி பொதுமக்கள் யார் நமக்கு நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என மதிமுகவின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கேட்டுக்கொண்டார். 

விருதுநகர் மக்களவை தொகுதியின் தேர்தல் அலுவலகம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அவைத்தலைவர் துரைசாமி தேர்தல் அலுவலகத்தை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொடுமைகளை செய்த காங்கிரஸ் அரசை பொதுமக்கள் தூக்கியெறிய வேண்டும். விருதுநகர் மக்களவை தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. எனவே பொதுமக்கள் யாரெல்லாம் உங்களுக்கு நல்லது செய்தார்கள் என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.

மொராய்ஜி தேசாய், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட பல்வேறு பிரதமர்களை நேருக்கு நேராய் சந்தித்து தமிழர்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தவர்தான் வைகோ என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழர்களுக்கு எங்கெல்லாம் பிரச்னைகள் எழுகிறதோ அங்கெல்லாம் நேரில் சென்று போராடியுள்ளார்.

அவர் எம்.பியாக இருந்த போது 65 ஆயிரம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமலை தடு்பபூசியும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிகி்ச்சையும் அளித்துள்ளார். அதேபோல், ஈரோடு மாநகராட்சியில் 5 லட்சம் மக்கள் குடிநீர் ஆதரத்திற்கு வழிவகுக்கும் திட்டம் கிடப்பில் இருந்தது. அதை சரிசெய்ய வேண்டும் என ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் புதுதில்லிக்குச் சென்று அத்துறையின் அமைச்சரை நேரில் சந்தித்து ரூ.390 கோடி ரூபாய்க்கான திட்டத்தை உடனே பெற்றுத் தந்தார். இதேபோல், தன்னலம் கருதாமல் பாடுபடும் தலைவருக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.