அவர் எம்.பியாக இருந்த போது 65 ஆயிரம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமலை தடு்பபூசியும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிகி்ச்சையும் அளித்துள்ளார். அதேபோல், ஈரோடு மாநகராட்சியில் 5 லட்சம் மக்கள் குடிநீர் ஆதரத்திற்கு வழிவகுக்கும் திட்டம் கிடப்பில் இருந்தது. அதை சரிசெய்ய வேண்டும் என ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் புதுதில்லிக்குச் சென்று அத்துறையின் அமைச்சரை நேரில் சந்தித்து ரூ.390 கோடி ரூபாய்க்கான திட்டத்தை உடனே பெற்றுத் தந்தார். இதேபோல், தன்னலம் கருதாமல் பாடுபடும் தலைவருக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.