இந்நிலையில் முதன், முதலாக 1989 முதல் உள்ளாட்சி தேர்தலில் எனது கிராமத்தின் வார்டு உறுப்பினராக போட்டிபோட்டு வெற்றி பெற்றேன். அதிலிருந்து ஒவ்வொரு உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் உள்ளிட்டவைகளில் போட்டியிட்டு வருகிறேன். இதுவரையில் தமிழக முதல்வருடன் பர்கூர், டி.ராஜேந்தரின் மனைவி உஷாவுடன் பழனி தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி, மக்களவை தேர்தலில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, நீதியரசர் ராமசாமி ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளேன். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் என்பது அழியாத கல்வெட்டு, அதில் என்னுடைய பெயர் இடம் பெற வேண்டும். எப்படியாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு அளிக்க வேண்டும் என்பதே இலக்கு எனவும் மன்மதன் தெரிவித்தார்.