டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மீனவர்களுக்கு துரோகம் இழைத்த ப.சிதம்பரம் ஓடி ஒளிகிறார்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:48 am

ஜெயப்பாண்டி

கன்னியாகுமரி செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

மதுரை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பொதுவாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அதனால் அவர் போட்டியிடாதது குறித்து கருத்து சொல்வதற்கில்லை. ஆனால், ப.சிதம்பரம் அப்படியில்லை. அவர் தமிழக மக்களுக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். இதனால் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிந்துவருகிறார்.

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி தமிழகத்தில் இரு முறை பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது என்றார்.

விமான நிலையத்தில் மதுரை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவ.முத்துக்குமார் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.