மதுரை: வெளிநாட்டு கரன்ஸி வாங்கி பணம் தராமல் ஏமாற்றிய மர்மநபர்
மதுரை கே.கே.நகர் பகுதியில் வெளிநாட்டுப் பணம் மாற்றும் நிறுவனம் வைத்திருப்பவர் கணேஷ் (25). இவரிடம் மாவட்ட நீதிமன்றம் எதிர்புறம் உள்ள விடுதியில் தங்கியிருந்த சிராஜுதீன் என்பவர் அடிக்கடி


மதுரையில் வெளிநாட்டுக் கரன்ஸிகளை வாங்கிவிட்டு மோசடி செய்ததாக மர்மநபர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
மதுரை கே.கே.நகர் பகுதியில் வெளிநாட்டுப் பணம் மாற்றும் நிறுவனம் வைத்திருப்பவர் கணேஷ் (25). இவரிடம் மாவட்ட நீதிமன்றம் எதிர்புறம் உள்ள விடுதியில் தங்கியிருந்த சிராஜுதீன் என்பவர் அடிக்கடி செல்லில் தொடர்புகொண்டு இந்தியப் பணத்துக்கு வெளிநாட்டுப் பணம் தேவை எனக்கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி கணேஷ் விடுதிக்குச் சென்று சிராஜுதீனைச் சந்தித்து 690 யூரோ கரன்ஸிகள், 980 யுடி டாலர்கள், 360 மலேசியன் ரிங்கிட்டுகள் ஆகியவற்றை அளித்துள்ளார். அதற்கு இந்திய ரூபாய் ரூ.1.25 லட்சம் தருமாறு கணேஷ் கேட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பணத்தை வாங்கிக்கொண்ட சிராஜுதீன், தனது ஆவணங்களை நகல் எடுத்துவிட்டு, பணத்தை எடுத்துவருவதாகக் கூறியதுடன், அறையில் தங்கியிருக்குமாறும் கணேஷைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதைநம்பிய கணேஷ் அறையில் இருந்துள்ளார். ஆனால், வெளியில் சென்ற சிராஜுதீன் நீண்டநேரமாகியும் திரும்பவில்லையாம். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாம். இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ் வியாழக்கிழமை மதுரை அண்ணாநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸôர் வழக்குப்பதிóந்து விசாரித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...