வாஜ்பாய் அரசைப் போல் தமிழர் நலன் சார்ந்த அரசாக மோடி அரசு அமையும்: வைகோ
மதுரை வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழர்களின் உரிமையைக் காவுகொடுத்த, இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸை ஒரு போதும் மன்னிக்கமாட்டோம் என்றார்.









