15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

காதல் ஜோடி தலைமறைவால் பெண்ணின் தந்தை தற்கொலை : பாமகவினர் வாக்குவாதம்

ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவானதால் மனமுடைந்த பெண்ணின் தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில்

Updated On :25 ஜூன் 2014, 7:55 am

ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவானதால் மனமுடைந்த பெண்ணின் தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணை உறவினர்களிடம் காண்பித்து விட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூறி பாமகவினர் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர்.

பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் இளவழகன், டி.கே. ராஜா உள்ளிட்டோர், காதலனுடன் சென்ற பெண்ணை, தாய் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காட்டிவிட்டு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்பூர் பொது மருத்துவமனையில், பெண்ணை உறவினர்களிடம் காண்பிக்கும் வரை உயிரிழந்த தந்தையின் உடலை  வாங்க மாட்டோம் என்ற அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு ஏராளமான காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை உயர் அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.