ஈரோட்டில் இந்திய மோடி முன்னேற்ற பேரவை அமைப்பு கடந்த 2 வருடங்களாக இயங்கிவருகிறது.இந்த அமைப்பு மோடியின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக பிஜேபியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை கண்டித்து மோடி பேரவையின் மகளிர் பிரிவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு பிஜேபி அலுவலகத்தை முற்றுகையிட வெந்தபோது, பைக்கில் வந்த கும்பல் அவர்கள் வந்த காரை தாக்கினர். இந்த சம்பவம் நடந்து 10 நிமிடங்களில் மோடி பேரவையின் தலைமை அலுவலகம் வந்த கும்பல் அலுவலக கண்ணாடி கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்துவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.