இதுகுறித்து ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் கூறியதாவது, போலீஸார் லாரியை விடாது விரட்டிச் சென்று வழிமறித்து மடக்கி பிடித்தனர். லாரியை ஓட்டிச் சென்ற ஒரேயொரு நபர் மட்டும் பிடிபட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.லாரி கடத்தலில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பழனி, சரவணன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸாரிடமிருந்து தப்பியிருந்தால் உடனடியாக லாரியில் இருந்த மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்திருப்பார்கள். லாரியை பல பாகங்களாக பிரித்து விற்பனை செய்திருப்பார்கள். போலீஸாரின் விரைவான முயற்சியால் கடத்தப்பட்ட லாரி மற்றும் மருந்து, மாத்திரைகள் உடனடியாக மீட்கப்பட்டது. கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.