தர்மத்தின் காவலராக விளங்கிய ஆடிட்டர் ரமேஷ், தனது வாழ்நாளில் எந்த அச்சுறுத்தலையும் கண்டு பயப்படாதவர். அவர் பயந்து வாழ்ந்திருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல்களால் ஏராளமான சகோதரர்களை இழந்துள்ளோம். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.இருப்பினும் அவர்களின் தாக்குதலைக் கண்டு நாம் பயந்து கொள்ளவோ, ஒழிந்து கொள்ளவோ கூடாது. மத்தியில் நரேந்திர மோடியின் ஆட்சி அமைந்ததால் மட்டுமே பயங்கரவாதிகள் முடங்கிவிடுவார்கள் என்று நாம் எண்ண முடியாது. அவர்கள் இருக்கும் வரையிலும் பயங்கரவாதம் இருந்து கொண்டே இருக்கும்.அவர்களை அழிக்கும் வரையிலும் தேச பக்தர்கள் ஒதுங்கிப்போகவோ, ஓயவோ மாட்டார்கள். தர்மத்தைக் காக்கும் கடமைப் போரில் நாம் உடனடியாக களம் இறங்க வேண்டும்.கடந்த 1984-ல் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றது. ஆனால் அவர் அதை தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.