திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

தொடர் தோல்வி எதிரொலி: செல்ஸி அணியின் பயிற்சியாளர் நீக்கம்!

செல்ஸி அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து...

News image

செல்ஸி அணியின் தலைமைப் பயிற்சியாளர். - படம்: ஏபி

Updated On :23 ஏப்ரல் 2026, 12:19 pm

செல்ஸி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியாம் ரோசெனியர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த லியாம் ரோசெனியர் கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு செல்ஸி அணிக்கு பயிற்சியாளராக நியமிகப்பட்டார். தற்போது, 106 நாள்களில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லியாம் ரோசெனியர் தலைமையில் செல்ஸி அணி 23 போட்டிகளில் 11 வெற்றிகள் பெற்றுள்ளன. பிரைடன் உடன் 3-0 என தோல்வியுற்றது. இந்தப் போட்டியுடன் தொடர்ச்சியாக ஐந்தாவது தோல்வியைச் சந்தித்தால் இந்தக் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோல்வி வெறுமனே 5 தோல்விகள் மட்டுமல்ல; ஒரு போட்டியிலும் ஒரு கோல்கூட அடிக்காததுதான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக செல்ஸி அணி 1912ல் இந்தமாதிரி கோல்களே அடிக்காமல் இருந்தது. கிளப் உலகக் கோப்பை வென்ற செல்ஸி அணிக்கு இப்படி ஒரு நிலைமையா என அதன் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

Summary

Following a Series of Defeats: Chelsea Coach Sacked!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.