திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ராணுவ வீரர் மனைவி பாலியல் பலாத்காரம்: விவசாயி தலைமறைவு

ராணுவ வீரர் மனைவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள விவசாயியை போலீஸார் தேடி வருகின்றனர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:24 am

கே.விஜயபாஸ்கா்

ராணுவ வீரர் மனைவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள விவசாயியை போலீஸார் தேடி வருகின்றனர்.

 கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வள்ளி(30) (பெயர்மாற்றப்பட்டுள்ளது), இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த துரை (35) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த வள்ளியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் கடந்த வாரம் ராமச்சந்திரன் ஊர் திரும்பினார். அவரிடம் நடந்த சம்பவத்தை வள்ளி கூறி உள்ளார். பின்னர் குறிஞ்சிப்பாடி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள துரையை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.