டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மீது போலீஸ் வழக்குப்பதிவு

பேராசிரியர் பணிக்கு பணம் வாங்கி ஏமாற்றியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மீது நாகமலைப்புதுக்கோட்டை போலீஸார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:35 am

ஜெயப்பாண்டி

பேராசிரியர் பணிக்கு பணம் வாங்கி ஏமாற்றியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மீது நாகமலைப்புதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது ஜோதிநாயக்கனூர். இவ்வூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தாற்காலிகப் பணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 பல்கலைக்கழகத்தில் நிரந்தரப் பேராசிரியர் பணிக்காக கல்வி வளர்ச்சிக்குழு டீன் ஜெயக்கொடியிடம் ரூ.16 லட்சம் அளித்ததாகவும், ஆனால், குறிப்பிட்டபடி வேலை வாங்கித்தரவில்லை என்றும் முருகேசன் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக மதுரை 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முருகேசன் தாக்கல் செய்த மனு அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி நாகமலைப்புதுகோட்டை போலீஸôர் ஜெயக்கொடி மீது வழக்குப்பதிந்து விசாரித்துவருவதாகத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.