டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

போலீஸ் அதிகாரி கார் மோதி காயமடைந்த மாணவர் சாவு

மதுரை செல்லூர் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது மகன் சையது உமர்பாரூக் (19). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இவர் கடந்த ஜூலை 31-ல் நண்பர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:07 am

ஜெயப்பாண்டி

மதுரையில் போலீஸ் அதிகாரி கார் மோதிய விபத்தில் காயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறு உயிரிழந்தார்.

மதுரை செல்லூர் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது மகன் சையது உமர்பாரூக் (19). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இவர் கடந்த ஜூலை 31-ல் நண்பர் பிரசன்னாவுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரி பகுதியில் உள்ள விரகனூர் அணை அருகே வந்துள்ளார். அப்போது அங்கு மதுரை ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆணையர் கார் வந்ததாகக் கூறப்படுகிறது. காரும், மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் சையது உமர்பாரூக், பிரசன்னா காயமடைந்தனர். 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உமர்பாரூக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலைமான் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.